செய்திகள்

பெரியாறு அணை நீர்மட்டம் 131 அடியை நெருங்குகிறது

Published On 2018-11-26 09:45 GMT   |   Update On 2018-11-26 09:45 GMT
நீர்பிடிப்பில் தொடரும் மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியை நெருங்கி வருகிறது. #MullaperiyarDam
கூடலூர்:

வடகிழக்கு பருவமழை காரணமாக கேரளாவிலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

130.30 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 130.90 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1209 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4908 மி. கன அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 60.20 அடி. வரத்து 1310 கன அடி. திறப்பு 3110 கன அடி. இருப்பு 3640 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 117 கன அடி. திறப்பு 110 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.27 அடி. வரத்து 52 கன அடி. திறப்பு 30 கன அடி. #MullaperiyarDam

Tags:    

Similar News