செய்திகள்
கோப்புப்படம்

நாராயணசாமி தாயார் மறைவுக்கு முக ஸ்டாலின் இரங்கல்

Published On 2018-11-23 09:13 GMT   |   Update On 2018-11-23 09:13 GMT
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #Narayanasamy #MKstalin
புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயார் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, தன்னை ஈன்றெடுத்த தாயாரை இழந்த வேதனையில் இருக்கும் புதுவை முதல்-அமைச்சருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #Narayanasamy #MKstalin
Tags:    

Similar News