செய்திகள்

தினகரனை நம்பி சென்றவர்கள் தெருவில் நிற்கிறார்கள்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

Published On 2018-10-29 12:05 GMT   |   Update On 2018-10-29 12:05 GMT
டி.டி.வி. தினகரனை நம்பி சென்ற 18 பேரும் தெருவில் நிற்கிறார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். #ADMK #MRVijayabaskar #ThambiDurai
வேலாயுதம்பாளையம்:

கரூர் வேலாயுதம்பாளையத்தில் அ.தி.மு.க. 47 ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர். காளியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக ஆட்சியை ஊழல் ஆட்சி என ஸ்டாலின் கூறுகிறார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது தி.மு.க. என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த முறைகேட்டில் கருணாநிதி முதல்வராக இருக்கும்போதே அவரது மகள் கனிமொழியும் ராசாவும் திகார் ஜெயிலில் இருந்தார்கள்.

இன்றைக்கு டி.டி.வி. தினகரனை நம்பி சென்ற 18 பேரும் (தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்) தெருவில் நிற்கிறார்கள். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ஜெயலலிதாவிடம் பொய் கூறி 35 ஆயிரம் ஊழியர்களை போக்குவரத்து கழகத்தில் நியமித்தார். இப்போது அவர்கள் நீதிமன்றத்துக்கு அலைகிறார்கள். இன்றைய போக்குவரத்து கழக நிலைமைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் காரணம். இன்னும் இரண்டரை ஆண்டு காலம் அ.தி.மு.க. அரசை யாராலும் அசைக்க முடியாது. அதன் பிறகும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:- இந்தியா முழுவதும் 4 வழிச்சாலையைக் கொண்டு வந்தது வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த நான்தான். அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒவ்வொரு தொண்டனும் எம்.எல்.ஏ., எம்.பி.தான். மக்கள் பிரச்சனைகளை மக்களவையில் பேசுவதற்குதான் எம்.பி., உள்ளாட்சி தேர்தல் நடத்தவிடாமல் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.. திராவிட இயக்கம் உருவானது சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவே. ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபட்சேவுக்கு மரியாதை செய்தது தி.மு.க.வும் காங்கிரசும்தான். எந்த தேர்தல் வந்தாலும் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், பேரூர் செயலாளர்கள் வக்கீல் சதாசிவம், சரவணன் மற்றும் பலர் உள்ளனர். #ADMK #MRVijayabaskar #ThambiDurai
Tags:    

Similar News