செய்திகள்
கொலை செய்யப்பட்ட விஜிஸ்

காதல் திருமணம் செய்த வாலிபர் கழுத்தறுத்து கொலை

Published On 2018-10-22 09:03 GMT   |   Update On 2018-10-22 09:03 GMT
இரணியல் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரணியல்:

இரணியலை அடுத்த குருந்தன்கோடு காடேற்றி பகுதியைச் சேர்ந்தவர் விஜிஸ் (வயது 32). கூலித்தொழிலாளி.

இவரது மனைவி சிந்து (25). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

விஜிசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று மாலையும் விஜிஸ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரத்தில் அவர் வீடடில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். அதன்பிறகு இரவு அவர் வீடு திரும்பவில்லை. மனைவி மற்றும் குடும்பத்தினர் தேடி பார்த்தபோதும் விஜிஸ் எங்கு சென்றார் என தெரியவில்லை.

இன்று காலை அந்த பகுதியில் உள்ள பொட்டல்குளம் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் கழுத்து அறுபட்ட நிலையில் விஜிஸ் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி இரணியல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குளச்சல் போலீஸ் ஏ.எஸ்.பி. கார்த்திக், இரணியல்  இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விஜிசை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தவர்கள் யார், இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் விஜிசின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
Tags:    

Similar News