செய்திகள்
பாபர் ஆசம் பாகிஸ்தான் அணியின் விராட் கோலி: கிளார்க் சொல்கிறார்
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி வரும் பாபர் ஆசம், பாகிஸ்தான் அணியின் விராட் கோலி என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க் கூறியதாவது:-
பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் ஆசம் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் பாகிஸ்தான் அணியின் விராட் கோலி ஆவார். பாகிஸ்தான் அணி அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் இளம் வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாபர் ஆசம் ஏற்கனவே பல சாதனைகளை புரிந்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிவேகத்தில் ஆயிரம் ரன்னை (21 போட்டி) கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் ஆசம் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் பாகிஸ்தான் அணியின் விராட் கோலி ஆவார். பாகிஸ்தான் அணி அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் இளம் வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாபர் ஆசம் ஏற்கனவே பல சாதனைகளை புரிந்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிவேகத்தில் ஆயிரம் ரன்னை (21 போட்டி) கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.