செய்திகள்

எம்எஸ் டோனியின் ‘ரன்அவுட்’ ஆட்டத்தின் திருப்புமுனை: சச்சின் தெண்டுல்கர்

Published On 2019-05-13 09:08 GMT   |   Update On 2019-05-13 09:08 GMT
ஐதராபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற எம்எஸ் டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என சச்சின் தெரிவித்தார்.
ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 148 ரன்கள் அடித்து 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரும், கிரிக்கெட் சகாப்தமுமான சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘டோனியின் ‘ரன்அவுட்’தான் ஆட்டத்தின் திருப்புமுனை. அதுவே முக்கியமான தருணம். பும்ராவின் பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது. மலிங்கா ஒரு மோசமான ஓவரை வீசினார். ஆனால், கடைசி ஓவரை சிறப்பாக வீசினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு 124 ரன்களை வதை்து கோப்பையை வென்றோம். இதனால் எனக்கு நம்பிக்கை இருந்தது’’ என்றார்.
Tags:    

Similar News