செய்திகள்

ஹர்திக் பாண்டியா மேட்ச் வின்னராக இருப்பார்: ஆண்ட்ரூ பிளின்டாப் சொல்கிறார்

Published On 2019-05-10 10:41 GMT   |   Update On 2019-05-10 10:41 GMT
உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேட்ச் வின்னராக இருப்பார் என்று ஆண்ட்ரூ பிளின்டாப் தெரிவித்துள்ளார். #CWC2019 #ICCWorldCup
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெரும்பாலான அணிகள் ஏராளமான ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ளது. இது அணிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறும் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்த பிளின்டாப், ஹர்திக் பாண்டியா இந்தியாவின் மேட்ச் வின்னராக திகழ்வார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆண்ட்ரூ பிளின்டாப் கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் மட்டுமல்ல. உலகின் எந்த பகுதியானாலும் அணிகளுக்கு ஆல்ரவுண்டர் மிகப்பெரிய சொத்துதான். ஒருநாள் போட்டியில் பந்து வீச்சாலும், பேட்டிங்காலும் அணிக்கு மேட்ச் வின்னராக இருப்பது பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை.



இந்தியா ஹர்திக் பாண்டியா, ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் என மூன்று ஆல்ரவுண்டர்களை பெற்றுள்ளது. ஹர்திக் பாண்டியாவை எல்லோரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். எந்தவித டென்ஷனும் இல்லாமல் களத்தில் காணப்படும் அவர், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். அவர் மிகச்சிறந்த மேட்ச் வின்னர்’’ என்றார்.
Tags:    

Similar News