செய்திகள்
திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரோகித் சர்மா.

கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா திருப்பதியில் சாமி தரிசனம்

Published On 2019-05-09 05:13 GMT   |   Update On 2019-05-09 05:13 GMT
ஐ.பி.எல். இறுதி போட்டியில் வெற்றிபெற வேண்டி கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார். #Tirupati #RohitSharma #IPL2019
திருமலை:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 12-ந்தேதி இரவு ஐதராபாத்தில் இறுதி போட்டி நடக்கிறது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அவரது மனைவி ரித்திகா, குழந்தை சமைரா ஆகியோருடன் இன்று காலை திருப்பதி வந்தார்.

காலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.

தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று லட்டு பிரசாதம் வழங்கினர். 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.

ஐ.பி.எல். இறுதி போட்டியில் வெற்றி பெற வேண்டி அவர் சாமி தரிசனம் செய்ததாக உடன் வந்தவர்கள் தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று காலை சுப்ரபாத தரிசன சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். #Tirupati #RohitSharma #IPL2019
Tags:    

Similar News