செய்திகள்

அரையிறுதியில் ஷிவ தபா தோல்வி: வெண்கல பதக்கத்துடன் ஏமாற்றம்

Published On 2019-04-25 12:51 GMT   |   Update On 2019-04-25 12:51 GMT
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவ தபா அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வெண்கல பதக்கமே வென்றார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 60 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் ஷிவ தபா அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இதனால் பதக்கத்தை உறுதி செய்தார்.

இன்று அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த போபா-உஸ்மான் பேட்டுரோவ்-ஐ எதிர்கொண்டார். இதில் ஷிவ தபா தோல்வியடைந்தார். அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் வெண்கல பதக்கம் உண்டு என்பதால் ஷிவ தபா வெண்கல பதக்கம் வென்றார்.

ஷிவ தபா 2013-ல் தங்கப் பதக்கமும், 2015-ல் வெண்கல பதக்கமும், 2017-ல் வெள்ளி பதக்கமும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News