செய்திகள்

இந்தியா உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது: குல்தீப் யாதவ் சொல்கிறார்

Published On 2019-03-20 13:15 GMT   |   Update On 2019-03-20 14:28 GMT
இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். #worldcup2019
இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. கடந்த உலகக்கோப்பை தொடருக்குப்பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி கோப்பையை முதன்முறையாக வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதேபோல் இந்தியாவும் உலகக்கோப்பையை வெல்லும் சாதகமான அணிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையை நம் சொந்த நாட்டிற்கு கொண்டுவர அதிக அளவிலான வாய்ப்பு உள்ளது. நம்மைத் தவிர்த்து மற்ற அணிகளும் அதிக அளவில் வலிமையாக உள்ளன.



ஆனால், மற்ற அணிகளை காட்டிலும் இங்கிலாந்து அணி வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். பாகிஸ்தான் அணி விளையாடு வருவதை பார்க்கும்போது அவர்களும் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளது’’ உள்ளது.
Tags:    

Similar News