செய்திகள்

கோபா டெல் ரே கோப்பை: காலிறுதி 2-வது லெக்கில் செவியாவை 6-1 என துவம்சம் செய்தது பார்சிலோனா

Published On 2019-02-01 13:49 GMT   |   Update On 2019-02-01 13:49 GMT
கோபா டெல் ரே கோப்பைக்கான காலிறுதி 2-வது லெக்கில் செவியாவை 6-1 என துவம்சம் செய்து பார்சிலோனா அரையிறுதிக்கு முன்னேறியது. #Barcelona #Messi
கோபா டெல் ரே கோப்பைக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு காலிறுதியில் பார்சிலோனா - செவியா அணிகள் மோதின. முதல் லெக்கில் செவியா 2-0 என வெற்றி பெற்றது. 2-வது லெக் நேற்று நடைபெற்றது. பார்சிலோனா அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி பிலிப்பே கவுட்டினோ கோல் அடித்தார். 31-வது நிமிடத்தில் ராகிடிச் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரத்திலும் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 53-வது நிமிடத்தில் கவுட்டினோவும், 54-வது நிமிடத்தில் செர்ஜி ரொபேர்ட்டோவும் ஒரு கோல் அடித்தனர். இதனால் பார்சிலோனா 4-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 67-வது நிமிடத்தில் செவியா அணியின் லோபஸ் கோல் அடித்தார்.



89-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் சுவாரஸ், 92-வது (90+2) நிமிடத்தில் மெஸ்சியும் கோல் அடிக்க பார்சிலோனா 6-1 என வெற்றி பெற்றது. இரண்டு லெக்கிலும் சேர்த்து பார்சிலோனா 6-3 என முன்னிலை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பார்சிலோனா அரையிறுதியில் பரம எதிரியான ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொள்கிறது. முதல் லெக் 6-ந்தேதியும், 2-வது லெக் 27-ந்தேதியும் நடக்கிறது.
Tags:    

Similar News