செய்திகள்

200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்திய அணி கேப்டன் மிதலி ராஜ் சாதனை

Published On 2019-02-01 10:30 GMT   |   Update On 2019-02-01 10:30 GMT
200 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் மிதலி ராஜ் படைத்துள்ளார். #MithaliRaj
நியூசிலாந்து - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டனாக மிதலி ராஜ் செயல்பட்டார். இந்த போட்டி அவரின் 200-வது ஒருநாள் போட்டியாகும். இதில் பங்கேற்றதன் மூலம் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.



மிதலி ராஜ் 1999-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார். இந்தியா இதுவரை 263 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் மிதலி ராஜ் 200 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 10 டெஸ்ட் மற்றும் 85 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இன்று போட்டி தொடங்குவதற்கு முன் கேக் வெட்டி சாதனையைக் கொண்டாடினார்.
Tags:    

Similar News