செய்திகள்

மும்பை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடக்கிறது- தேர்வுக்குழு மீது கவாஸ்கர் கடும் தாக்கு

Published On 2018-12-04 12:19 GMT   |   Update On 2018-12-04 12:19 GMT
மும்பை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தேசிய தேர்வுக்குழு மீது கவாஸ்கர் கடுமையாக தாக்கியுள்ளார். #Gavaskar
இந்திய தேசிய அணியில் சமீப காலமாக மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. தேசிய தேர்வுக்குழு மிகப்பெரிய ஓரவஞ்சனை செய்கிறது என்று முன்னாள் இந்திய அணி கேப்டனும், தற்போதைய வர்ணனையாளரும் ஆன கவாஸ்கர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘மும்பையைச் சேர்ந்த சித்தேஷ் லாட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதிலும், இந்தியா ஏ அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. மும்பை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு தொடரில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட புதுமுக வீரர்கள் மற்ற மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். அமோல் முசும்தார் முதல்தர கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஆனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல் சித்தேஷ் லாட்டிற்கு நடக்காது என்று நம்புகிறேன்.

ஆனால், இதுவரை இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை. இது சித்தேஷ் லாட்டிற்கு மட்டுமல்ல, கிரிக்கெட் கிரிக்கெட் இதுபோன்ற ஓரவஞ்சனை மற்றும் முட்டாள் தனமான முடிவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டாவது இது மாறுமா? நாம் பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News