செய்திகள்
ஆசிய கோப்பை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து- வங்காள தேசத்திற்கு பாராட்டு
ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்ததோடு, கடும் நெருக்கடி வங்காள தேசத்திற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். #AsiaCup2018
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய வங்காள தேசம் 222 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா கஷ்டப்பட்டு கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மிகவும் பரப்பாக சென்ற போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றினார்கள். கடும் சவாலாக விளங்கிய வங்காள தேச அணிக்க பாராட்டுக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மிகவும் பரப்பாக சென்ற போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றினார்கள். கடும் சவாலாக விளங்கிய வங்காள தேச அணிக்க பாராட்டுக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Great job by the guys to win that tight game last night. ✌🏾 @BCCI
— Virat Kohli (@imVkohli) September 29, 2018
Seventh Asia Cup title for us 🙌🏽 🏆
Congrats to Bangladesh as well for giving a tough fight. @BCBtigers#AsiaCupFinal#AsiaCup2018Finalpic.twitter.com/hTHGSkq1kN