செய்திகள்

இங்கிலாந்து தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகுவது அவசியமானது- ராகுல் டிராவிட்

Published On 2018-09-21 14:50 GMT   |   Update On 2018-09-21 14:50 GMT
இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது அவசியம் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். #RahulDravid
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-4 என இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றால், மிகவும் சிறப்பான முறையில் தயாராகுவது அவசியமானது என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இங்கிலாந்து கண்டிசன் பேட்டிங் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்காது. இரண்டு அணி பேட்ஸ்மேன்களும் திணறியதாக நான் நினைக்கிறேன். விராட் கோலியை நீக்கிவிட்டு நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்த தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்கு ஈசியாக இருக்கவில்லை.



நான் இங்கிலாந்தில் விளையாடியுள்ளேன். கண்டிசன் சற்று கடினமான இருக்கலாம். ஆனால், ஐந்து ஆட்டங்களிலும் கண்டிசன் கடினமாகவே இருப்பது மிகவும் அரிதானது. இதுபோன்ற கண்டிசனுக்கு நாம் மிகவும் சிறப்பான வகையில் தயாராக வேண்டும். நாம் முயற்றி செய்து, கண்டிசனுக்கு ஏற்ற வகையில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு விளையாடுவது தேவையானது. இது கடினமானதுதான். எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News