செய்திகள்

புரோ கபடி லீக் போட்டி தொடக்க தேதி மாற்றம்

Published On 2018-09-19 05:16 GMT   |   Update On 2018-09-19 05:16 GMT
சென்னையில் அடுத்த மாதம் தொடங்கும் புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க தேதி அக்டோபர் 7-ந் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #ProKabaddiLeague
சென்னை:

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த போட்டியின் தொடக்க தேதி அக்டோபர் 7-ந் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது.

‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டம் கொச்சியில் டிசம்பர் 30 மற்றும் 31-ந் தேதியும், இறுதிப்போட்டி மும்பையில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 5-ந் தேதியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போட்டியை நடத்தும் மஷால் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  #ProKabaddiLeague
Tags:    

Similar News