செய்திகள்

உ.பி. முதல் மந்திரி செயல் முட்டாள்தனமானது - பத்திரிகையாளர் கைதுக்கு ராகுல் காந்தி கண்டனம்

Published On 2019-06-11 11:17 GMT   |   Update On 2019-06-11 11:17 GMT
உ.பி.யில் பத்திரிகையாளரை கைது செய்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செயல் முட்டாள்தனமானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டார். அவரை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
அவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்ததை நீதிபதிகள் கண்டித்தனர். அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டனர். 



இந்நிலையில், உ.பி.யில் பத்திரிகையாளரை கைது செய்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் செயல் முட்டாள்தனமானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் தன்னை விமர்சித்த பத்திரிகையாளர் கனோஜியை கைது செய்து சிறையில் அடைத்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செயல் முட்டாள்தனமானது. கைது செய்த பத்திரிகையாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News