செய்திகள்

குற்றவாளிக்கு பா.ஜ.க. சீட் கொடுத்தது ஜனநாயக படுகொலை- சரத் பவார்

Published On 2019-06-10 12:13 GMT   |   Update On 2019-06-10 12:13 GMT
குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு பா.ஜ.க.வில் சீட் கொடுக்கப்பட்டது ஜனநாயக படுகொலை என சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
 
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட  பிரக்யா சிங் தாகூர் பா.ஜ.க. சார்பில் போபால் தொகுதியில் போடியிட்டு வெற்றிப்பெற்றார். பிரக்யாவை பா.ஜ.க. களமிறக்கியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த வாரம் தேசிய புலனாய்வு பிரிவு  நீதிமன்றத்தில் பிரக்யா ஆஜரானார்.

இந்நிலையில் பிரக்யா மற்றும் பா.ஜ.க.வை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவார் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு எம்.பி.சீட்  கொடுக்கப்பட்டது ஜனநாயக படுகொலை" என சாடியுள்ளார்.



11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத பிரக்யா சிங், முதன்முறையாக கடந்த வாரம் ஆஜராகினார்.
Tags:    

Similar News