செய்திகள்
இந்து மதம் பற்றி அவதூறு- சசிதரூருக்கு முன்ஜாமின் வழங்கியது டெல்லி கோர்ட்
இந்து மதம் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சசிதரூருக்கு நிபந்தனை முன் ஜாமினை டெல்லி நீதிமன்றம் வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவருக்கு எதிராக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ராஜீவ் பாபர் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
எனவே இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு சசிதரூர் மனு செய்து இருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. மேலும் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகை கட்டவும் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு வருகிற ஜூலை 25-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவருக்கு எதிராக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ராஜீவ் பாபர் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
எனவே இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு சசிதரூர் மனு செய்து இருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. மேலும் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகை கட்டவும் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு வருகிற ஜூலை 25-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.