செய்திகள்
உள்துறை மந்திரியாக அமித்ஷா இன்று பொறுப்பேற்றார்
உள்துறை மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட அமித் ஷா டெல்லியின் உள்துறை அமைச்சகத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 54 மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட மந்திரிகளுக்கு நேற்று துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே, பாஜக தேசிய தலைவராக உள்ள அமித்ஷா உள்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு அமித் ஷா இன்று காலை வந்தார். அவருக்கு அலுவலக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, அமித் ஷா முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.