செய்திகள்

டெல்லியில் காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

Published On 2019-05-30 02:03 GMT   |   Update On 2019-05-30 02:16 GMT
இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி, வாஜ்பாய் ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்



ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். 
Tags:    

Similar News