செய்திகள்

போலி செய்தியை பரப்பிய பா.ஜ.க. எம்.பி. - உண்மையை அம்பலப்படுத்திய காவல் துறை

Published On 2019-05-28 10:31 GMT   |   Update On 2019-05-28 10:31 GMT
கர்நாடக மாநிலத்தில் இளைஞர் மறைவை சுற்றி வெளியாகி வந்த புரளிகளுக்கு காவல் துறை முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.



கர்நாடக மாநிலத்தின் பெலகவி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் மாடுகளை காப்பாற்ற முயன்றதால், அடித்துக் கொல்லப்பட்டார் என வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், உண்மையை கண்டறிய பெலகவி காவல் துறை அதிரடி விசாரணையை துவங்கியது.

விசாரணையில் உயிரிழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது முதல், இவர் மாடுகளை காப்பாற்ற முயன்றதால் கொல்லப்பட்டார் என்ற வாக்கில் தகவல்கள் பரவத் துவங்கின. 



இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி.யான ஷோபா, இளைஞரின் படுகொலைக்கு காவல் துறை முறையான விசாரணை மேற்கொண்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். 

இந்நிலையில், காவல் துறை ஆணையர் லோகேஷ் குமார் இளைஞரின் மறைவு தற்கொலை தான் என உறுதிப்படுத்தி இருந்தார். உயிரிழந்த நிலையில், கைப்பற்றப்பட்ட இளைஞரின் உடலில் தாக்கப்பட்டதை உணர்த்தும் காயங்கள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் இளைஞர் தற்கொலையை அவரது குடும்பத்தாரும் உறுதிப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News