செய்திகள்
30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் அன்று நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்புறுதி பிரமாணம் செய்து வைப்பார்.