செய்திகள்

துணை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2019-05-26 09:34 GMT   |   Update On 2019-05-26 09:34 GMT
நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கும் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
புதுடெல்லி:

மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 30-ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இரண்டாவது முறை பதவியேற்கும் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.



இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட துணை ஜனாதிபதியின் டுவிட்டர் பக்கத்தில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக அடுத்த பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்ட மோடிக்கு வாழ்த்து தெரிவித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவருடன் சிற்றுண்டி அருந்தியபோது நாட்டின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவது மற்றும் பாராளுமன்ற அமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்’ என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
Tags:    

Similar News