செய்திகள்

மத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

Published On 2019-05-25 16:06 GMT   |   Update On 2019-05-25 16:06 GMT
மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 30-ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததும், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். எம்பிக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார். அதனை ஏற்று மோடியை ஆட்சியமைக்க வரும்படி ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 



இந்த சந்திப்புக்குப் பின் மோடி பேசுகையில், “ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினேன். அதனை ஏற்று புதிய அரசு அமைக்கும்படி என்னை கேட்டுக்கொண்டார். அதுவரை காபந்து பிரதமராக என்னை நியமித்துள்ளார். விரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் வழங்க உள்ளேன். புதிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தும். ” என்றார்.

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வரும் 30-ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News