செய்திகள்

ராகுல் ராஜினாமா செய்ய விரும்பியதாக வெளியான தகவல் உண்மையல்ல- காங்கிரஸ் விளக்கம்

Published On 2019-05-25 09:10 GMT   |   Update On 2019-05-25 09:10 GMT
தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி விரும்பியதாக வெளியான தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் படுதோல்வியடைந்தது. கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.

இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும், காங்கிரஸ் கமிட்டி இதனை ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது.


ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை  என்று காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News