செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - பாஜக 303 இடங்களில் அபார வெற்றி

Published On 2019-05-24 16:39 GMT   |   Update On 2019-05-24 16:39 GMT
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக 303 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 350க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இதேபோல், காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 52 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News