செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று மாலை சந்திக்கிறார்
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்திக்கிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்திக்கிறார்.
பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.