செய்திகள்

மீண்டும் ஒருமுறை இந்தியா வென்று விட்டது: பிரதமர் மோடி டுவிட்

Published On 2019-05-23 09:45 GMT   |   Update On 2019-05-23 09:45 GMT
அனைத்தையும் உள்ளடக்கிய வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றது. 542 தொகுதிகளில் 340-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. பாஜக கட்சி தனியாக 280 தொகுதிகளுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதனால் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அனைத்தையும் உள்ளடக்கிய வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வென்று விட்டது’’ என்று பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா ‘‘நாட்டு மக்களுக்கு நன்றி. இது இந்தியாவின் வெற்றி. இந்த வெற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது’’ என்று டுவிட் செய்துள்ளார்.
Tags:    

Similar News