செய்திகள்

ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி 12 தொகுதிகளில் முன்னிலை- காங்கிரஸ் சரிந்தது

Published On 2019-05-23 08:30 GMT   |   Update On 2019-05-23 08:30 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 பாராளுமன்றத் தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் பின்தங்கியுள்ளது.
ராஞ்சி:

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால், மீண்டும் மோடி பிரதமர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதிய நிலவரப்படி, மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் பாஜக 11 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

ஹசாரிபாக் தொகுதியில் மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா 1,16,819 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கோபால் சாகுவை விட முன்னிலை பெற்றிருந்தார்.



லோகர்தகா தொகுதியில் மத்திய இணை மந்திரியும் பாஜக வேட்பாளருமான சுதர்சன் பகத், காங்கிரஸ் வேட்பாளர் சுக்தேவ் பகத்தை விட 5852 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார். முன்னாள் முதலமைச்சர்கள் சிபு சோரன், பாபுலால் மராண்டி ஆகியோர் தும்கா மற்றும் கோடர்மா தொகுதிகளில் பின்தங்கினர்.

மற்றொரு முன்னாள் முதலமைச்சரும் பாஜக வேட்பாளருமான அர்ஜுன் முண்டா, குந்தி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் பின்தங்கினார். பாஜக எம்பியும் மாநில பாஜக தலைவருமான லட்சுமண் கிலுவா, சிங்பம் (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கீதா கோடாவைவிட 44962 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார்.
Tags:    

Similar News