செய்திகள்

பிரதமருக்கு எதிராக அவதூறு - ராகுல் காந்தி மீதான வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு

Published On 2019-05-22 22:59 GMT   |   Update On 2019-05-22 22:59 GMT
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பதிவான வழக்கில், தீர்ப்பை நிறுத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் ரத்தத்தின் பின்னால் ஒளிந்துகொள்வதாகவும், அவர்களது தியாகத்தை காசாக்குவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2016-ம் ஆண்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடுமாறு டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜோகிந்தர் துலி என்ற வக்கீல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 15-ந் தேதி போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமர் விஷால் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி வரை இந்த வழக்கில் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்து நேற்று உத்தரவிட்டார்.
Tags:    

Similar News