செய்திகள்

வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை ஏற்படாமல் தடுக்கவேண்டும் - உள்துறை அமைச்சகம்

Published On 2019-05-22 12:57 GMT   |   Update On 2019-05-22 13:44 GMT
நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
புதுடெல்லி:

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-க்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
Tags:    

Similar News