செய்திகள்

குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்

Published On 2019-05-20 05:43 GMT   |   Update On 2019-05-20 05:43 GMT
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் திருமணங்கள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய முகூர்த்த நாள் விழா நேற்று நடந்தது.

இதையொட்டி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.


குருவாயூர் கோவிலில் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் திரண்ட உறவினர்கள் கூட்டம்.

இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமணம் மற்றும் சோறு ஊட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தவர்களால் கோவிலின் திருமண மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நடந்த இந்நிகழ்ச்சிகளால் கோவிலுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்தது.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடத்திய நெய் அபிஷேகம், பால் பாயாசம், துலாபாரம் நிகழ்ச்சிகள் மூலமும் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கோவில் அமைந்துள்ள பகுதியில் நேற்று போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. கோவிலுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் திரும்பி வரும் சாலைகள் ஒரு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருந்தன.

இதன் காரணமாக பக்தர்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் கோவிலுக்குச் சென்று திரும்பினர்.


Tags:    

Similar News