செய்திகள்

மத்தியில் பா.ஜனதா இல்லாத கட்சிகள் ஆட்சி அமைக்கும்- ப.சிதம்பரம் சொல்கிறார்

Published On 2019-05-16 09:41 GMT   |   Update On 2019-05-16 09:41 GMT
பா.ஜனதா அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பா.ஜனதா அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கும். 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் ஆட்சி அமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது.



தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என்று பா.ஜனதா கூறி வருகிறது.

பிராந்திய அடையாளங்கள், வரலாற்று கலாச்சாரத்தை இழிவுப்படுத்தி வரும் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News