செய்திகள்

மேற்கு வங்காள தேர்தல் பார்வையாளர்களிடம் தேர்தல் ஆணையம் காணொலி காட்சியில் இன்று விசாரணை

Published On 2019-05-15 05:16 GMT   |   Update On 2019-05-15 05:16 GMT
கொல்கத்தாவில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்காள தேர்தல் பார்வையாளர்களிடம் காணொலி காட்சி மூலம் விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக பேரணியில் அக்கட்சி தலைவர் அமித் ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.
 
இந்நிலையில், கொல்கத்தாவின் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, இன்று காலை 11.30 மணியளவில் மேற்கு வங்காள தேர்தல் பார்வையாளர்களிடம் காணொலி காட்சி மூலம்  விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News