செய்திகள்

மம்தாவை விகாரமாக சித்தரிக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பெண் கைது

Published On 2019-05-12 09:49 GMT   |   Update On 2019-05-12 09:49 GMT
மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரிக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக பாஜக யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா  பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து காவலில் அடைத்து வைத்துள்ளனர்.


இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த  பிரியங்கா சர்மாவின் தாயார், ‘அனைவரையும்போல் என் மகளும் இதை ’ஷேர்’ செய்துள்ளார். ஆனால், அவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்துடன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News