செய்திகள்

கோடை விடுமுறை - திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Published On 2019-05-08 10:21 GMT   |   Update On 2019-05-08 10:21 GMT
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. #TirupatiTemple
திருமலை:

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துகாணப்படும். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து அலைமோதுகிறது.

நேற்று அதிகாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 78,630 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 32,158 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் மையத்தில் காத்திருந்த பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். ரூ.300 சிறப்பு கட்டண தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ரூ.2 கோடியே 86 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. #TirupatiTemple
Tags:    

Similar News