செய்திகள்

அரசு பஸ்சில் செடிகள் வளர்க்கும் பெங்களூரு டிரைவர்

Published On 2019-05-05 11:53 GMT   |   Update On 2019-05-05 11:53 GMT
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் டிரைவர் ஒருவர் அரசு பஸ்சில் செடிகளை வளர்த்து பசுமையின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தி வருகிறார். #Bangalorebusdriver #busdriverkeptplants
பெங்களூரு:

பெங்களூரு பெருநகர பேருந்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் நாராயணப்பா. இங்குள்ள கவல் பைலசன்டிரா-யஷ்வந்த்பூர் இடையிலான வழித்தடத்தில் செல்லும் பஸ்சை ஓட்டும் இவர் கடந்த 3 ஆண்டுகளாக டிரைவர் இருக்கை மற்றும் முன் கண்ணாடி பகுதியில் பசுமையான செடிகளை வளர்த்து, பராமரித்து வருகிறார்.



நமது சுற்றுச்சூழலை பசுமைமயமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்து வருவதாக நாராயணப்பா கூறுகிறார். #Bangalorebusdriver #busdriverkeptplants
Tags:    

Similar News