செய்திகள்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்

Published On 2019-02-14 11:56 GMT   |   Update On 2019-02-14 11:56 GMT
குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்திக்கு பெண் ஒருவர் திடீரென முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #RahulGandhi
வல்சாத்:

பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றவும் ராகுல் காந்தி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில், குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் கலந்து கொண்டு உரையாற்றினார்.



அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர்கள் 5 பேர் ராகுல்காந்திக்கு மலர்மாலை அணிவித்தனர். கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் ராகுல்காந்தியின் கன்னத்தில் திடீரென முத்தம் கொடுத்தார். இதனை எதிர்பார்க்காத ராகுல்காந்தி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். அதனை தொடர்ந்து புன்முறுவலுடன் மேடையில் அமர்ந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #RahulGandhi
Tags:    

Similar News