செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சில் 3 பாதுகாப்பு படைவீரர்கள் காயம்

Published On 2019-01-17 09:54 GMT   |   Update On 2019-01-17 09:54 GMT
ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் குண்டுவீசி தாக்கியதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். #SrinagarMilitantsAttack
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஜீரோ பிரிட்ஜ் உள்ளது. இதன் அருகில் பாதுகாப்பு படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த 3 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 11-ம் தேதி லால் சவுக் பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் யாரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #SrinagarMilitantsAttack
Tags:    

Similar News