செய்திகள்
காங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம்: ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி மதிப்பிட்டால் அது தவறான முடிவாகத் தான் இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #Congress #RahulGandhi
புதுடெல்லி :
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கின்றன. இதற்காக இன்று (சனிக்கிழமை) அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து முக்கிய முடிவை அறிவிக்க உள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ‘‘உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு எங்கள் திறமையை வெளிப்படுத்துவோம். இந்த தேர்தலில் எதிர்பாராத அதிர்ச்சியை அளிப்போம். காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி மதிப்பிட்டால் அது தவறான முடிவாகத் தான் இருக்கும்’’ என்றார்.
இதனிடையே காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் பாக்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயாராக உள்ளது. அதே சமயம் எங்களுடன் ஒருமித்த கருத்துடன் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகளையும் வரவேற்போம்’’ என்றார். #Congress #RahulGandhi
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கின்றன. இதற்காக இன்று (சனிக்கிழமை) அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து முக்கிய முடிவை அறிவிக்க உள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ‘‘உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு எங்கள் திறமையை வெளிப்படுத்துவோம். இந்த தேர்தலில் எதிர்பாராத அதிர்ச்சியை அளிப்போம். காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி மதிப்பிட்டால் அது தவறான முடிவாகத் தான் இருக்கும்’’ என்றார்.
இதனிடையே காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் பாக்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயாராக உள்ளது. அதே சமயம் எங்களுடன் ஒருமித்த கருத்துடன் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகளையும் வரவேற்போம்’’ என்றார். #Congress #RahulGandhi