செய்திகள்

முதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்

Published On 2018-10-21 10:06 GMT   |   Update On 2018-10-21 10:06 GMT
மகாராஷ்டிரா முதல் மந்திரியின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் சொகுசு கப்பலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் செல்பி எடுத்த சம்பவம் காவலர்களை பதற வைத்தது. #AmrutaFadnavis #AmrutaFadnavisselfie
மும்பை:

இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

இந்த தொடக்க விழாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவரது மனைவி அம்ருதாவும் வந்திருந்தார். சொகுசு கப்பலில் அழகில் மெய்மறந்த அம்ருதா பட்னாவிஸ் பலவித கோணங்களில் நின்று தனது கைபேசியால் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.



உற்சாக மிகுதியினால் ஒருகட்டத்தில் கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான நுனிப் பகுதிக்குள் தாவி குதித்தார். இதை கண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரும், அம்ருதாவின் பாதுகாவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கிருந்து மேலே ஏறிவருமாறு அவர்கள் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்த அம்ருதா, கடல் அலைகள் உரசும் கப்பலின் அடிப்பகுதியில் நின்றவாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்பி எடுத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. #AmrutaFadnavis  #AmrutaFadnavisselfie
Tags:    

Similar News