செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை - டி.ஆர்.பாலு

Published On 2019-05-28 20:48 GMT   |   Update On 2019-05-28 21:01 GMT
பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்று டி.ஆர்.பாலு நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

தி.மு.க. அமைப்பு செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

மத்திய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. அப்படி இருக்கும்போது பிரதமர் பதவி ஏற்பு விழாவில் நானும், ஆ.ராசாவும் பங்கேற்பதாக ஆதாரமற்ற தகவலை சொன்னால் எப்படி?.



ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் இருந்து இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தால் விழாவில் பங்கேற்பது குறித்து தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News