செய்திகள்
ரஜினி, கமலுக்கு அழைப்பு: தமிழகத்தில் பாஜக ஊடுருவ முயற்சி- வைகோ பேட்டி
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி ரஜினி மற்றும் கமலுக்கு விடுத்துள்ள அழைப்பு தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என வைகோ கூறியுள்ளார்.
நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது. இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என வைகோ பேட்டியளித்து உள்ளார்.