செய்திகள்

ஆட்சி தக்கவைப்பு- எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து

Published On 2019-05-24 10:09 GMT   |   Update On 2019-05-24 10:09 GMT
22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்கள், வேட்பாளர்களுக்கும், தே.மு.தி.க சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் என்றும் தேமுதிக தொடர்ந்து ஈடுபட்டு அயராது பணியாற்றும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News