செய்திகள்

பொள்ளாச்சியில் வெற்றியை நெருங்கிய திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம்

Published On 2019-05-23 12:09 GMT   |   Update On 2019-05-23 12:09 GMT
பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், அதிமுக வேட்பாளர் மகேந்திரனை விட 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நெருங்கினார்.
பொள்ளாச்சி:

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

பொள்ளாச்சி தொகுதியில் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 5,08,943 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 3,49,851 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார்.

அமமுக வேட்பாளர் முத்துக்குமார் 24 ஆயிரத்து 498 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா 28 ஆயிரத்து 935 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை 54 ஆயிரத்து 955 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
Tags:    

Similar News