செய்திகள்

தென் சென்னையில் 3 மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை வெளியிடாத தேர்தல் ஆணையம்

Published On 2019-05-23 05:58 GMT   |   Update On 2019-05-23 05:58 GMT
தென்சென்னையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 மணி நேரமாகியும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
சென்னை:

பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.



ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் முன்னிலை நிலவரம் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 36 பாராளுமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மூன்று மணி நேரம் ஆகியும், வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 
Tags:    

Similar News