செய்திகள்

கருத்து கணிப்பை பொருட்படுத்தவில்லை - மு.க.ஸ்டாலின்

Published On 2019-05-20 07:27 GMT   |   Update On 2019-05-20 07:27 GMT
கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தி.மு.க. முந்தி இருக்கிறதே?

பதில்:- தி.மு.க. முந்தி இருப்பதில் உங்களுக்கு சந்தோ‌ஷமா? இல்லையா? ஊடங்களில் வரக்கூடிய கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும், ஒரு வேளை பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

எங்களை பொறுத்தவரையில் கலைஞர் மிகத் தெளிவாக பல நேரங்களில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள். இன்னும் 3 நாட்களில் மக்களுடைய கணிப்பு என்ன என்பது தெளிவாக தெரியப் போகிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

கேள்வி:- மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் அங்கம் வகிக்க தி.மு.க. தயாராக இருக்கிறதா?

பதில்:- 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததற்கு பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன்.



கேள்வி:- சந்திரபாபு நாயுடு உங்களிடம் பேசினாரா?

பதில்:- அவர் பல நேரங்களில் பேசி தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கருத்தை சொல்லி இருக்கிறார்.

கேள்வி:- 23-ந்தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா?

பதில்:- தேர்தல் முடிவு 23-ந்தேதி மாலை அல்லது இரவுக்கு பிறகுதான் தெரிய வரும். அது தெரிந்ததற்கு பிறகுதான் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தால் பயன் உள்ளதாக இருக்கும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News