செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. அபார வெற்றி பெறும் - கருத்து கணிப்பில் தகவல்

Published On 2019-05-19 14:05 GMT   |   Update On 2019-05-19 14:05 GMT
தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இங்கு அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிகளும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 34 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு 29 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 9 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News