செய்திகள்

தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவில்லாமல் நேர்மையாக செயல்படவேண்டும்- திருமாவளவன்

Published On 2019-04-18 04:36 GMT   |   Update On 2019-04-18 04:36 GMT
தேர்தல் அதிகாரிகள் இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #thirumavalavan
செந்துறை:

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தை சேர்ந்த இவர் இன்று காலை அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது தாயார் பெரியம்மா என்பவருடன் வந்து வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதாகி உள்ளது. சில இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் அதிகாரிகள் இதுவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #thirumavalavan
Tags:    

Similar News